ADVERTISEMENT

பிஎச்டி முடிக்கவேண்டும் என்றால் ஆசைக்கு இணங்க வேண்டும்-மதுரை காமராஜர் பல்கலை துறைத்தலைவர் மீது கேரள இளம்பெண் பரபரப்பு புகார்!!

03:05 PM Dec 09, 2018 | kalaimohan

பிஎச்டி வேண்டுமென்றால் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று காமராஜர் பல்கலைக்கழகத்தின் துறைதலைவர் மிரட்டுவதாக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் கல்லூரிப்படிப்பை முடித்த மாணவி ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஆய்வுகளுக்கான மையத்தில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் துறை தலைவர் கருணமகாராஜன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு வருடமாக காமராஜர் பல்கலைக்கழகத்தின் திரைப்படம் மற்றும் மின்னணு ஆய்வுத்துறை துறை தலைவர் கர்ணமகாராஜா என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் பிஎச்டி பட்டம் வேண்டும் என்றால் 5 லட்சம் ரூ ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தன்னிடம் கர்ணமகாராஜா வலியுறுத்தியதாகவும், அந்த மாணவி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அப்படி பணம் கொடுக்க முடியவில்லை என்றால் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுவதாகவும், தான் கூறும் நபரை தனிமையில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்ததாகவும் அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார்.

இதனையடுத்து துறைத்தலைவர் மகாராஜா கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அந்த பெண் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்த நிலையில் அந்த மாணவி கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளார். மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி துறைத் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி கேரள மாநிலம் கம்யூனிஸ்டை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மருமகள் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT