ADVERTISEMENT

வேலூர் மக்களவை உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவியேற்பு!

04:08 PM Nov 18, 2019 | Anonymous (not verified)

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று பதவியேற்றார். இவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


பணப்பட்டுவாடா காரணத்தால் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யபட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் தேர்தல் நடந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஏசி சண்முகத்தை தோற்கடித்தார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று நடந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT