ADVERTISEMENT

கனியாமூர் பள்ளி கலவரம் - 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவு!

04:45 PM Aug 29, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு இளைஞர்கள் மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது இவர்கள் மாடுகளைத் திருடியதாகவும், காவல்துறை வாகனத்தை கொளுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT