ADVERTISEMENT
ADVERTISEMENT
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்புப் பணம் வாங்காமல் சினிமாவில் நடிக்கும் ஓரிரு நடிகர்களின் நானும் ஒருவன். வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனா இருந்தேன் என்பது மட்டும் போதாது மக்களுக்கு என்ன செய்தேன் என்பதே முக்கியம். பணம் படைத்தவர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஏழையாக ஒருவர் வந்து பணக்காரர் ஆகி, மக்களை ஏமாற்றுவதே தவறு. கடமை தவறினால் ராஜினாமா செய்வேன் என எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறப்படும் என்றார்.
Show comments