கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகீரனூர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி கொண்டு 675 வெளிமாநில மதுபான பாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பின்னர் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் வாகனத்தின் ஒட்டுனர் குபேந்திரன் (43) என்பதும், இவர் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுக்காவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மது பானங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 1,50,000 இருக்கும் என்று கூறப்படுகிறது.
Show comments