Skip to main content

பைப்பை திறந்தால் தண்ணீர் மட்டுமல்ல பணமும் கொட்டும்... சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரி!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

If you open the pipe, not only water but also money will be spilled ... Trapped Public Works Officer!

 

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்ச புகாரில் சிக்கும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வழக்கம். அப்படி நடத்தப்படும் சோதனையில் முறைகேடாகப் பதுக்கிவைக்கப்படும் பணம், சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்வதும் வழக்கம். சில நேரம் தீவிர சோதனையில் நூதன முறையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவரும். அப்படி நூதன முறையில் பணம் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம்தான் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

 

கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான 65 க்கும் மேற்பட்ட இடங்களில் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கர்நாடக கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சாந்த கவுடா என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தனது வீட்டிலும் சோதனை நடைபெறலாம் என முன்னரே யூகித்திருந்த இளநிலை பொறியாளர் சாந்த கவுடா நூதனமான முறையில் பணத்தைப் பதுக்கிவைக்க முற்பட்டுள்ளார். வீட்டிலிருந்த முறைகேடான பணம் மற்றும் நகைகளைக் கழிவுநீர் குழாய் போன்று பைப் ஒன்றைப் போலியாக செட் செய்து அதற்குள் பதுக்கி வைத்துள்ளனர்.

 

இதை எப்படியோ மோப்பம் பிடித்த அதிகாரிகள் அந்த போலி கழிவுநீர் குழாயில் சோதனையிட்ட போது அதிலிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல கிலோ மதிப்பு கொண்ட நகைகள், ஆவணங்களைக் கைப்பற்றப்பற்றினர். இங்க பைப்பை திறந்தால் தண்ணீர் மட்டுமல்ல பணமும் கொட்டும் எனக் காட்டியுள்ளார் கர்நாடக பொதுப்பணித்துறை பொறியாளர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.