கடந்த நவம்பர் 15 ம் தேதி யாரும் ஏதிர்பார்த்திடாத வகையில் வீசி, பேரழிவை ஏற்படுத்தியது கஜா புயல். இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் கடலோர தாலுக்காகக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும், வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி மிகவும் கடுமையாக பதித்தது. இதையடுத்து தன்னார்வலர்களும், அரசுகளும் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, குடிநீர், மருந்து பொருட்கள், ஆடைகள் என நிவாரணப் பொருட்களை கிடங்குகளில் வைத்து வழங்கினர்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பல கிராமங்களில் கஜா புயல் நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படாமலேயே நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 25ம் தேதி மாலை வெளிப்பாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் பணிபுரியும், ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பைக்குகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை அருகில் இருந்த பொதுமக்களுக்கு தெரிந்து, நம்பியார் நகர் மீனவப் பெண்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குக்கு தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் நம்பியார் நகர் மீனவர்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு பொறுப்பாளர்களிடம் கேட்டனர், உயர் அதிகாரிகள் உத்தரவு பேரில்தான் நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும் சேமிப்புக் கிடங்கை காலி செய்ய வேண்டிய உள்ளதாகவும் காலாவதியாகும் பொருட்களை தந்ததாகவும் கூறி சமாளித்துள்ளனர்.