Skip to main content

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் ஒபிஎஸ் நற்பணி மன்றம்!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
ops



துணை முதல்வர் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தற்பொழுது அவருக்காக நற்பணி இயக்கம் ஒன்று திடீரென உருவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியை பொருத்தவரை துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு கோஷ்டியாகவும், அதுபோல் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக கம்பம்  எம்எல்ஏ ஜக்கையன் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறார்கள்.
 

இந்த நிலையில்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி ஆதரவாளரான கம்பம் கே. எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டி திடீரென எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் மெகா சைஸ் போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டினார். இப்படி அடித்து ஒட்டப்பட்ட  போஸ்டரில் ஓபிஎஸ் படம் இல்லாமல் அடிக்கப்பட்டு இருப்பது கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அந்த போஸ்டர்களையும் அங்கங்கே கிழித்தெறிந்தனர்.

 

ops



அதை தொடர்ந்து பால்பாண்டி தீபாவளிக்காக வாழ்த்து கூறியும் எடப்பாடியார் பேரவை சார்பாக அங்கங்கே வைத்திருந்தார். இப்படி ஒபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்திலையே ஒபிஎஸ்சை ஓரம் கட்டி விட்டு எடப்பாடிக்கு ஆதரவாக பேரவை உருவாகி வருவதை கண்டு கட்சிக்காரர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
 

இந்த நிலையில் திடீரென தேனி மாவட்டத்தில் "தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் ஓபிஎஸ் ஆதரவாளரான ராஜ்மோகன் போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் ஓபிஎஸ் படம் போலவே எடப்பாடி படத்தையும் பெரிதாக போட்டுள்ளனர். அதோடு  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் படத்தையும் போட்டு உள்ளனர். 


 

ops



இப்படி ஓபிஎஸ்க்காக திடீரென உருவாக்கப்பட்ட இந்த நற்பணி இயக்கம் தற்பொழுது முதல் கட்டமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே இருக்கும் கல்லாயங்குடி கிராமத்தை தத்தெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அங்கங்கே முகாம் போட்டு  முதல்கட்டமாக செய்து வருகிறார்கள். 


இதுபற்றி நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, அம்மாவுக்கு பிறகு அண்ணன் ஒபிஎஸ் தான் அந்த அடிப்படையில் தான் இந்த நற்பணி இயக்கம் உருவாகியுள்ளது. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறோம். தேனி மாவட்டத்தில் உள்ள நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை அண்ணன் ஒபிஎஸ் க்காக உருவாக்கப்பட்ட தாயின் தலை மகனாரின் நற்பணி இயக்கத்தை  உருவாக்கி பொது மக்களுக்கும், கட்சிகாரர்களுக்கும் உதவி செய்ய தயாராகி வருகிறோம் என்று கூறினர்.  
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.