ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் அண்மையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து இருந்தது. இதன் காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழு பணி நாளாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Show comments