ADVERTISEMENT
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (24.11.2021) இந்திய மாணவர் கூட்டமைப்பினர் பாலியல் வன்முறையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், கையில் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ADVERTISEMENT
மேலும், கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனைக்கான வகுப்புகளை நடத்திடு, பள்ளி பாடப்புத்தகத்தில் பாலியல் கல்வி குறித்தான பாடங்களை இணைத்திடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Show comments