ADVERTISEMENT

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

05:25 PM Mar 06, 2020 | kalaimohan

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனத்தை தயார் செய்யும் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வந்த புட்லூரை சேர்ந்த வேலவன், சந்துரு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி பரிதமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க இரண்டு உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதுகுறித்து செவ்வாய் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் உடலும் உடல்கூறாய்விற்கு அனுப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாததே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனகூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT