ADVERTISEMENT

கத்திமுனையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல்... திருப்பூரில் பரபரப்பு!! 

01:40 PM Sep 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளனர். முக கவசம் அணிந்து இருந்த அந்த நபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்ற காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தின் வாசலிலேயே இந்த கடத்தல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT