ADVERTISEMENT

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை... அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலருக்கும் தொடர்பு?

05:58 PM Nov 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலர் சம்பந்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை கோவலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் மிரட்டப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் தனது மகளை மீட்டுத் தரவேண்டும் எனக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையின் அடிப்படையில், சிறுமியைப் பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சகிதா பானு, இடைத்தரகர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடுக்கடுக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பா.ஜ.க பிரமுகரான ராஜேந்திரன், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT