ADVERTISEMENT
சென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் 5 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடி வருகின்றனர். நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த அந்த பழமையான கட்டிடத்தில் யாரும் இல்லை என தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 5 அடுக்கு மாடி இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments