ADVERTISEMENT
ADVERTISEMENT
நாளை மறுநாள் அனைத்து பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் டான்செட் தேர்வு நடைபெற இருப்பதால் அதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசிற்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க, டான்செட் (TANCET) எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Show comments