ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை புறநகரான பூந்தமல்லி,போரூர்,மாங்காடு, குன்றத்தூரில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,
தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் நவம்பர் 19, 20 ,21 தேதிகளில் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் 19, 20ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ADVERTISEMENT
Show comments