இந்த சம்பவம் குறித்து அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரிக்க முயன்றபோது, அந்த நபர் போலீசார்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். போலீசாரையும் தாக்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ் அப்புகளில் பரவியது.
அந்த நபரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இதில் அவர் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நவீன் என்றும், அவர் பழ வியாபாரி என்றும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் அடையாறு காவல்துறையினருக்கு தகவல் அளித்து அவர்களிடம் நவீனை ஒப்படைத்துள்ளனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து, தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறுகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் சொல்லி புகார் கொடுத்துள்ளார்.