Sasikala visit ... AIADMK ministers complain to DGP in person!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும்பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்கு சசிகலாதமிழகம் கிளம்புவார்என டி.டி.வி.தினகரன்சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே சென்றபோது அவரது காரில் அதிமுககொடிகட்டப்பட்டிருந்தது குறித்துசர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சேலம்நகர அதிமுகநிர்வாகிகள் சார்பில்போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுககொடியைசசிகலா பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர்மீண்டும் டிஜிபியை நேரில் சந்தித்துஅதிமுக கொடியைசசிகலா பயன்படுத்தக் கூடாதுஎனப் புகாரளித்துள்ளனர்.

Sasikala arrival ... AIADMK ministers complain to DGP in person!

Advertisment

இந்த புகாருக்கு பின் அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்துபேசியதமிழகசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ''சொத்துகுவிப்பு வழக்கில்சிறைதண்டனைபெற்றசசிகலாசென்னைதிரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் சசிகலாவும், தினகரனும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர்.டிஜிபியிடம்அல்ல முப்படை தளபதிகளிடம் புகாரளித்தாலும் எங்களைதடுக்க முடியாது எனடி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பையேஅவமதிக்கும் வகையில்சசிகலா செயல்படுகிறார்.அதிமுக கொடியைசசிகலாபயன்டுதகூடாது.மனிதவெடிகுண்டாக மாறி மக்களுக்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தும் அவரதுசதித்திட்டத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது'' என்றார்.

நேற்று(05.02.2021) தென்காசியில் திருமலைக்கோவிலில் சாமிதரிசனம் செய்த டி.டி.வி.தினகரன்செய்தியாளர்களைச் சந்திக்கையில், “தீயசக்திதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார். டிஜிபியிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.”எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.