ADVERTISEMENT
புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.
ADVERTISEMENT
காரைக்காலில் புயல் காரணமாக சில நாட்களாகவே கனமழை பொழிந்துவரும் நிலையில் இன்றும் தற்பொழுது தொடர்ந்து திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. அதேபோல் காரைக்காலில் அனைத்து ஆறுகளிலும் கரையை கண்காணிக்க பொதுப்பணித்துறைக்கு புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Show comments