ADVERTISEMENT
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ADVERTISEMENT
அதன்படி நேற்று (26.11.2021) இரவுமுதலே சென்னையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்தது. இந்தக் கனமழையின் காரணமாக தி.நகர் கிரியப்பா சாலை, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோயில் தெரு, சம்பங்கி தெரு, சீனிவாசன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் தி.நகர் மேட்லி சுரங்கப் பாலத்தில் மீண்டும் மழை நீர் தேங்கியதால் பாலம் மூடப்பட்டது.
Show comments