ADVERTISEMENT

இவர்கள் ருசி கண்ட பூனைகள்... இந்தி திணிப்பு என பேசினால் உண்ணாவிரதம்... எச்.ராஜா பேட்டி!!

08:06 PM Jun 30, 2019 | kalaimohan

இந்தி கற்பிக்கும் பள்ளிகளை நடத்திக் கொண்டு இந்தியை எதிர்ப்பதா. இந்த செயல் யாரை ஏமாற்றுவதற்கு என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசுகையில்,

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் திரும்பவும் கொண்டுவரப்படுகிறது என கூறிவருகிறது சில கட்சிகள். ஏனெனில் இது ருசி கண்ட பூனை, ரத்த சுவை பார்த்த புலி சும்மா இருக்காது. பொய்யை சொல்லி ஜெயித்து விட்டோம் என்ற காரணத்தினால் மீண்டும் பொய் சொல்வதற்காக திராவிட முன்னேற்ற கழகம் இந்தித் திணிப்பு என்ற புருடாவை விட ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லா சிபிஎஸ்சி பள்ளிகளிலும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டு யாரை ஏமாற்ற முயல்கிறீர்கள். இந்தி திணிப்பு பற்றி பேசினால் 45 பள்ளிக்கூடத்துக்கு முன்னாலும் பாஜக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் எனக் கூறினார்.

.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT