ADVERTISEMENT

குரூப் 2 தேர்வு - முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் டிஎன்பிஎஸ்சி!

11:08 AM Feb 18, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


குரூப்-2 தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்து தேர்வில் ஆரம்பித்து நேர்காணல் வரை பல முறைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சில ஆண்டுகளாக தேர்வுகளை தேர்வாணையம் நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் தேர்வு நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது குரூப்-2 தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தேதி குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று மதியம் அறிவிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT