Skip to main content

நீங்க டெஸ்ட் வைக்கிற கொஸ்டீன் தான் டி.என்.பி.எஸ்.சி. கொஸ்டீனா? சிக்கும் முக்கிய புள்ளிகள்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த மாபெரும் முறைகேட்டில் ஓநாய்களை விட்டுவிட்டு இன்னமும் ஆடுகளையே தேடிக்கொண்டிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனத்திலேயே கோடிகளில் குதிரைபேரம் தொடங்கிவிடுகிறது. அப்படி குதிரை பேரத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்துவிட்டு ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நியமிக் கப்படும் லாபநோக்க உறுப்பினர்களை விசாரித்தாலே உண்மை வெளிவந்துவிடும்.
 

tnpsc



2016-ஆம் ஆண்டு 11 உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி முறைகேடாக நியமனம் செய்தது அ.தி.மு.க. அரசு. இதனால் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 11 உறுப்பினர்களின் நியமனத்துக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம். இதனால் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றது அ.தி.மு.க. அரசு. அங்கும் அடிதான்.
 

admk



அதிலும் ஓய்வுபெற்ற நீதிபதி ராம மூர்த்தியை கண்டிப்பாக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. காரணம், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு பவர்ஃபுல் லான நீதிபதி பதவியில் இருந்த ராம மூர்த்தி... சம்பளமில்லாத, கௌரவப் பதவியான டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவியை பிடிப்பதற்காகவே விருப்ப ஓய்வுபெற்றுவிட்டு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்றால் நீதிபதிக்கான சம்பளத்தைவிட இதில் எந்தளவு சம்பாதிப்பார்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

tnpsc



2001-2006 ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து வருடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தப்படாமல் இருந்து 2008 தி.மு.க. ஆட்சியில்தான் துணை கலெக்டர், காவல்துறை டி.எஸ்.பி. உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கப் பட்டது. அனைத்து மையங்களும் பழைய வினாத்தாள் முறைப்படி பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக்க… புதிய வடிவில் மாதிரி வினாத்தாள் தயாரித்து கொடுத்தது தி.நகரிலுள்ள பிரபல பயிற்சி மையம். என்ன ஆச்சர்யம்?! அந்த மாதிரி வினாத்தாளைப் போலவே இருந்தது டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிதாக மாற்றப்பட்ட வினாத்தாள்.
 

tnpsc



2016 குரூப் 1 மோசடி அம்பலமான போது இதையெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்ட மத்திய குற்றப் புலனாய்வுத்துறை துணைக்கமிஷனர் மல்லிகா, அந்த பயிற்சி மைய உரிமையாளரைப் பார்த்து, ‘நீங்க டெஸ்ட் வைக்கிற கொஸ்டீன் பேப்பரைத் தான் டி.என்.பி.எஸ்.சி. கொஸ்டீனா தயார்பண்ணி தேர்வு வைக்கிறாங்களா?'’ என்று கேட்டிருக்கிறார். அதே மல்லிகா ஐ.பி.எஸ். தலைமையில்தான் தற்போது குரூப் 4 முறைகேட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது.


அதுபோலவே, அரசுப் பணிகளை விற்பதில் குற்றச்சாட்டுக் குள்ளானவர்தான் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தற்போதைய லோக் ஆயுக்தா உறுப்பினருமான ராஜாராம். நீதிமன்றத்தில் குட்டுவாங்கிய 11 உறுப்பினர்களில் இவரும், மீண்டும் விண்ணப்பித்து உறுப்பினர் ஆனார்.

ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக இருந்த இவர், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஆனதும் எந்த பயிற்சி மையத்திலும் பதிவு பெறாத இந்து அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையரின் மகன் குரூப் 1 பதவியான வணிகவரித்துறை ஏ.சி. ஆனது சர்ச்சைக் குள்ளானது. கிண்டி ஏ.சி.யாக இருந்து ஓய்வுபெற்றவரின் மகன் 2017 குரூப் 1 உயர் பதவியான காவல்துறை டி.எஸ்.பி. பதவியை உறுப்பினர் ராஜாராம் மூலம் பிடித்திருக்கிறார். டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் அருள்மொழி ஐ.ஏ.எஸ். (ஓய்வு) ஒப்புதல் இல்லாமலேயே 2016 குரூப் 1 தேர்வு முடிவுகளை அவசர அவசரமாக வெளியிட்டார் ராஜாராம்.


பல்வேறு குற்றச்சாட்டுக்குள்ளான ராஜாராமுக்கு துணையாக இருந்ததே டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் செகரட்டரி விஜயகுமார் ஐ.ஏ.எஸ்தான் என்ற குற்றச் சாட்டும் எழும்புகிறது. அதாவது, விஜயகுமாரின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் முதலமைச்சரின் பர்சனல் செகரட்டரியான மற்றொரு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இருவருமே தெலுங்கர்கள். ராஜாராமும் தெலுங்கர் தானாம். தற்போதுள்ள டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களான பாலுச்சாமியும் சுப்பிரமணியனும் முன்னாள் செகரட்டரி விஜயகுமாரின் ஆசியோடு நிரப்பப் பட்டவர்கள்தான். பாலுச்சாமி, கொங்கு பெல்ட் வழக்கறிஞர். சுப்பிரமணியன், எலக்ட்ரிசிட்டி போர்டிலிருந்து வந்தவர். இவர்களது துணையில்லாமல் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. வேறு துறைக்குச் சென்றாலும் ராஜாராமும் விஜயகுமாரும் இப்போதும் டி.என்.பி.எஸ்.சி.யில் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். சேர்மன் அருள்மொழிக்கு இவை தெரிந்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை.

லஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டப்பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ நம்மிடம், "டி.என்.பி.எஸ்.சி. என்பது நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் வருகிறது. என்னதான் கவர்னர் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இத்துறையின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பொறுப்பு உண்டு. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் முதலமைச்சர் மற்றும் துறை ஜெயக்குமாரின் ஒப்புதலின்றி நடந்துவிடாது. அப்படியிருக்க... டி.என்.பி.எஸ்.சி.யில் நடக்கும் முறைகேடுகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் அறிக்கைவிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும், ஒவ்வொரு உறுப்பினரும் லஞ்சம் கொடுத்து விட்டுத்தான் பதவியைப் பிடிக்கிறார்கள்.

இதுபோன்ற முறைகேடுகள் சேர்மன், செகரட்டரி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்காது. டி.என்.பி.எஸ்.சி. என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அப்படியென்றால் இராமநாதபுர மாவட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்களின் தேர்வை மட்டும் தடை செய்துவிட்டு மற்ற மாவட்டங்களில் முறைகேடு நடக்க வில்லை என்று அமைச்சர் எப்படி முடிவுசெய்து அறிக்கை விடுகிறார்? முறைகேடுகள் குறித்து கவர்னரின் கவனத்துக்கு கொண்டுசெல்லாதது ஏன்?

டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் அருள்மொழி, செகரட்டரி நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டவர்கள் நேர்மையான அதிகாரிகள் என்றால் எளிதாக கண்டறியக்கூடிய குரூப் 4 முறைகேட்டை கண்டுபிடித்து பத்திரிகை ஊடகங்களில் பரவுவதற்கு முன்பே ஏன் இவர்கள் கண்டுபிடிக்கவில்லை? தேர்வு முடிவுகளை -பெயர், எண், சொந்த ஊர், எழுதிய மையம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால் பொதுமக்களாகிய நாமே முறைகேட்டை எளிதாக கண்டு பிடித்துவிடுவோமே? ஆனால், அதிலேயே வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களுக்கு லட்சக்கணக்கில் மக்களின் ttவரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுவது ஏன்? நேர்மையானவர் என்றால் என்ன அர்த்தம். நான் லஞ்சம் வாங்கமாட்டேன் மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதை கண்டுகொள்ள மாட்டேன் என்பது நேர்மையா?'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.

இதுகுறித்து நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நாம் கேட்டபோது, "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப் படையில்தான் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் நியமனம் நடக்கிறதே தவிர இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. லஞ்ச பேரமும் இல்லை. பதினோரு உறுப்பினர்கள் நியமனத்தில் விதிகளை பின்பற்றவில்லை என்றுதான் நீதிமன்றங்கள் சொன்னதே தவிர அதில் முறைகேடு நடந்ததாக சொல்லவில்லை. டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் ராஜாராம் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.) நீங்கள் சொல்வதுபோல் முறைகேடானவர் என்றால் லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்குமா? ஏதோ 2 மையங்களில் நடந்த முறைகேட்டை ஒட்டுமொத்த முறைகேடாக எடுத்துக்கொள்ள முடியாது. குரூப் 1 தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து அங்கு பதில் கொடுக்கப்படும்'' என்றார் விளக்கமாக.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மெயின் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வரும் திருநங்கையுமான ஸ்வப்னா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செக்ஷன் ஆபீசர்கள் சிவசங்கர் மற்றும் புகழேந்தி, தேர்வில் பாஸ் பண்ண வைக்க லஞ்சம் கொடுத்த ராம்குமார், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் பெருமாள் உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர் ஏ.டி.சி. ஷ்யாமளா தேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீஸார். நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. செக்ஷன் ஆபீசர் காசிராம்குமாரை 2018 ஏப்ரல் 26-ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. இதற்குமேல் விட்டால் பெரிய திமிங்கலங்கள் சிக்கிவிடும் என்று விசாரணை அதிகாரிகளையே மாற்றிவிட்டது அ.தி.மு.க. அரசு. அப்படியிருக்க, குரூப் 4, குரூப் 2-ஏ உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொள்ளும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறுவது மேற்கண்ட ஊழல் பெருச்சாளிகளை தப்பவைக்கவா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.


 

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.