ADVERTISEMENT

"திட்டமிட்டபடி மே 21- ஆம் தேதி குரூப்- 2 தேர்வு நடைபெறும்"- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் பேட்டி! 

04:58 PM May 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு தேர்வுப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், "வரும் மே 21- ஆம் தேதி அன்று குரூப்- 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும். 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்- 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேர் குரூப்- 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேர் குரூப்- 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப்- 2 தேர்வு நடைபெற உள்ளது. காலை 09.00 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிகபட்சமாக சென்னையில் ஏழு மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் மூன்று மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

குரூப்- 2, குரூப் - 2ஏ தேர்வைக் கண்காணிக்க 333 பறக்கும் படைகள், 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதியில் குரூப்- 2 தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT