ADVERTISEMENT

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்தது தமிழ்நாடு அரசு!

10:03 AM Aug 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மெட்ரிக்லேசன் பள்ளிகள் இயக்குநர் நேற்று (03/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1) (சி)இன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேற்காண் திட்டத்தில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 05/07/2021 முதல் 03/08/2021 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. நாளது தேதிவரை 73,086 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன. தற்போது கரோனா தொற்று பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு, இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13/08/2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT