ALL SCHOOLS CHENNAI HIGH COURT ORDER TN GOVT

Advertisment

"பாலியல் தொல்லைப் பற்றி மாணவர்கள் அச்சமின்றித் தெரிவிக்க அனைத்துப் பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும். சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அதிகாரி உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற வேண்டும். அதேபோல் அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும்" தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சேலம் தேவாலய மதபோதகர் ஜெயசீலனுக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிச் செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயசீலனை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.