ADVERTISEMENT

சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த அரசு அனுமதி!

02:34 PM Feb 03, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சி கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புத்தகங்கள் தேக்கமடைந்துள்ளதால் கண்காட்சிக்கு அனுமதி வழங்க பதிப்பக உரிமையாளர் சங்கத்தினர் அரசு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 16- ஆம் தேதி அன்று தொடங்கும் புத்தக கண்காட்சி மார்ச் மாதம் 6- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனினும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கைப்பிணிகள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு டிக்கெட் கொடுக்கலாம். அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT