ADVERTISEMENT

பெண் குழந்தை விற்பனை... பெற்றோர் உட்பட 5 பேர் கைது!

02:58 PM Sep 22, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூரில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டானை அடுத்து வடவேக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் - மீனா தம்பதியினர் தங்கள் பெண் குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் கோவையில் உள்ள ஒரு தம்பதிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெற்றோர், இடைத்தரகர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT