ADVERTISEMENT

துப்பாக்கி முனையில் பிரபல ரவுடிகள் கைது!

10:23 AM Jul 04, 2018 | Anonymous (not verified)


ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராமராஜ் (32). இவரது தம்பி வினோத் (28). இவர்கள் இருவர் மீதும் கொள்ளை, வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளை சம்பவத்தில் சுங்குவார்சத்திரம் போலீசார் இவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம், சுங்குவார்சத்திரம் அடுத்த செல்லம்பட்டிடை ஏரியில் சகோதரர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ அசோக் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால், அவர்கள் ஏரியில் குதித்து தப்பிவிட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த ராம்ராஜ், வினோத் ஆகியோரை துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT