Skip to main content

"3 முறை துப்பாக்கிச் சத்தம்... என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி மணிகண்டனின் பின்னணி..!"

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

கடந்த ஜூன் 15-ந்தேதி சென்னையில் ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தாதாவாக திகழ்ந்த மணிகண்டனுக்கு, தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக்கின்றனர் தனிப்படை போலீஸார்

யார் இந்த மணிகண்டன்?

விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டப்பஞ்சாயத்து, கஞ்சாவிற்பனை, பெண்களை வைத்து பாலியல் தொழில், ரவுடியிசம், கூலிக்கு கொலை என சகலத்திலும் கொடிகட்டி பறந்ததால், பெயருக்கு முன்னால் தாதா என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது.

rowdy


இவருக்கு போட்டியாக பூபாலன் என்பவரும் களத்தில் இறங்க, 2 தரப்பிலும் பல கொ(த)லைகள் விழுந்தன. விழுப்புரம் எஸ்.பியாக இருந்த நல்லசிவம், பெரிய்யா, அமல்ராஜ் ஆகியோர் இரு தரப்பையும் எச்சரித்தாலும் சட்டவிரோத செயல்களும் தொடர்ந்தன. இதனால், மணிகண்டன் மீது ஆரோவில், மயிலம், கோட்டக்குப்பம், செஞ்சி, திருவண்ணாமலை என பல்வேறு காவல் நிலையங்களில் 8 கொலை வழக்கு உட்பட 28 வழக்குகள் பதிவாகின.

2010-ஆம் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் தரப்பு கூலிப்படையை ஏவி கொலை செய்தது. இதன்பிறகும் தாதா மணிகண்டனின் குற்றச்செயல்கள் அதிகரித்தன. இதனால், 'என்கவுன்டர் 'லிஸ்ட்டில் அப்போதே மணிகண்டன் பெயர் சேர்க்கப்பட்டது.

 

rowdy


உயிருக்கு பயந்து தாம் திருந்தி வாழப் போவதாக  2015-ல் அப்போதைய எஸ்.பி அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் மணிகண்டன். 'நான் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால், என் பெயரை சொல்லி சிலர் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பூபாலன் குரூப் ஆரோவில்லில் பெண்களை வைத்து தொழில் செய்கின்றனர். ஆனால், அவர்கள் என் பெயரை பயன்படுத்துவதால், போலீஸார் என்மீது வழக்கு போட்டுள்ளனர். ஆகவே எஸ்பி ஐயாவை பார்த்து திரிந்து வாழ மனு கொடுத்துள்ளேன்'என அப்போது ஊடகங்களிடமும் தெரிவித்தார் மணிகண்டன்.

மீண்டும் சட்ட விரோத செயல்.?

பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது என்பதை போல், கொஞ்சநாள் ஒதுங்கியே இருந்த மணிகண்டன், மீண்டும் தாதா வேடம் பூண்டார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018-ல் நடந்த முக்கிய காங். பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் விழுப்புரம் போலீஸார் தேடி வந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு தான் சென்னை வந்து குடும்பத்துடன் வசித்துள்ளார். இன்று மாலை(24-09-201) விழுப்புரத்தில் இருந்து வந்த தனிப்படை போலீஸார், மணிகண்டன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர்.

 

rowdy


பின்னர் அவனை பிடிக்க முயன்றபோது, போலீஸாரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளான். இதனால், போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தான்.

 

rowdy


4 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழ் தளத்தில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துள்ளான். 6-15 மணியளவில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால், மேல் தளத்தில் வசித்தவர்கள் கீழே வந்து பார்த்துள்ளனர். அப்போது, கூட்டமாக இருந்த போலீஸார், மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். மொத்தம் 3 முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.