திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது நண்பர்கள் பாலக்கரையை சேர்ந்த பாரூக், உறையூரை சேர்ந்த டேனியல். இந்த 3 பேர் மீது திருச்சியில் பல்வேறு வழக்குகள் உள்ளது. பாரூக் தற்போது குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். திருச்சியில் இருந்த போது கார் விற்பனை செய்ததில் டேனியல் என்பவருக்கு பாரூக் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. இதை வாங்கி கொள்வதற்காக பாரூக் திருச்சிக்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் பாரூக் வினோத்திற்கும் பணம் கொடுக்க வேண்டி இருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பாரூக்கு வரும் தகவல் அறிந்த வினோத் கண்டோன்மென்ட் காவல்நிலையம் அருகே காத்திருந்தார். அங்கு டேனியலும், பாரூக்கும் அங்கு வந்தனர் அவர்களிடம் சென்ற வினோத் தனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அதில் கோபம் அடைந்த பாரூக் கத்தியால் வினோத்தை குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பாரூக்கை விரட்டினார்கள். அதற்குள் டேனியலும், பாரூக்கும் தப்பி ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கண்டோன்மென்ட் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவில் திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையம் அருகே நடந்த இந்த ரவுடிகள் மோதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments