ADVERTISEMENT

நாளை காந்தி மார்க்கெட்டை திறக்கலாம் – மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவு!

11:00 PM Nov 26, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறப்பது தொடர்பாக மதுரை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் வியாபாரிகளின் நலன் கருதி காந்தி மார்க்கெட்டை திறக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காந்திமார்க்கெட் தொடா்பாக விசாரணை செய்து முழு அறிக்கை தாக்கல் செய்ய ஒரு தனிக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், விரைவில் அவர்கள் அளிக்கும், காந்தி மார்க்கெட் தொடா்பான அனைத்து ஆவணங்களையும், வியாபாரிகளின் கருத்துகள், பொதுமக்களின் கருத்துகள், அரசுத் தரப்பில் அவா்கள் முன்வைக்கும் காரணம் உள்ளிட்டவற்றை கொண்டு இறுதித் தீா்ப்பு வழங்கப்படும் என்றும், தற்காலிகமாக வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டை திறந்து மீண்டும் வியாபாரம் செய்யலாம் என்றும் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளதோடு தங்களுடைய போராட்டங்களையும் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனா்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT