Skip to main content

அஞ்சல் தேர்வில் இந்தி, ஆங்கிலம்... தமிழ் தவிர்க்கப்பட்டது ஏன்...? தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடை!!

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த  உயர்நீதிமன்ற  மதுரை கிளை நாளை தேர்வினை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதே சமயம் தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்படாதது குறித்து மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 Postal Exam Hindi, English... Prohibited from publishing the exam result!!


மதுரையை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் தொடுத்திருந்த மனுவில், பொதுத்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு  மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.

 

 Postal Exam Hindi, English... Prohibited from publishing the exam result!!


இதற்கான தேர்வுகள் நாளை நடைபெற இருக்கின்ற நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இனிவரும் காலங்களில் அஞ்சல் தேர்வுகள் அனைத்தும், அஞ்சல் துறை தேர்வு வினாக்கள் அனைத்தும் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருக்கும். இரண்டாம் தாளுக்கான தேர்வு அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

 Postal Exam Hindi, English... Prohibited from publishing the exam result!!


ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அஞ்சல் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடைபெற்ற பொழுது ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநில மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிப்பாக தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் மத்திய அரசு தேர்வுக்கான வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 Postal Exam Hindi, English... Prohibited from publishing the exam result!!


இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு பழைய முறைப்படியே தேர்வு நடத்துவதற்கு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்ற நீதிபதி இரவிச்சந்திரன் அமர்வு தேர்வினை எழுதலாம் ஆனால் தேர்வு முடிவை வெளியிட கூடாது எனவும், தமிழ் மொழியில் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியிடப்படாதது குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.