நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்திருந்தார். இந்நிலையில் தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் கிழமை கோவை செல்லவிருக்கும் நிலையில் தொடர்ந்து புதன்கிழமை ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
24 ஆம் தேதி மாலை பொள்ளாச்சியில் திமுகவில் பிற கட்சியினர் இணையும் நிகழ்விலும், 25 ஆம் தேதி திருப்பூர் செல்லும் முதல்வர் சிறு, குறு நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார். ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கு செல்ல பயண திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக அந்த பயணம் ரத்தானது. இந்நிலையில் இந்த நான்கு நாள் பயணத் திட்டத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார்.