Skip to main content

கர்நாடகாவை அதிரவைத்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை... தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது!  

Published on 28/08/2021 | Edited on 30/08/2021

 

karnataka forest incident... police investigation

 

கர்நாடக மாநிலத்தை அதிரவைத்துள்ள கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கர்நாடக மாநிலம் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா வனப்பகுதியில் காதலர்கள் இருவர் கடந்த 24 ஆம் தேதி தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலர்களை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அந்த இடத்திலேயே அந்த கும்பலை சேர்ந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனையடுத்து காதலனை கல்லால் தலையில் தாக்கிய அந்தக் கும்பல் காதலியை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டுச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் காதலனை சுற்றி நின்றிருந்த அந்த கும்பலைச் சேர்ந்த நான்குபேர் தங்களுக்கு உடனடியாக நான்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என காதலனை மிரட்டியுள்ளனர். காதலியை முதலில் காட்டுங்கள் என காதலன் முறையிட்டதையடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இரத்த காயங்களுடன் 22 வயதுடைய காதலியை கொண்டுவந்து நிறுத்தினர். அந்த நேரத்தில் அந்த வழியாக திடீரென பொதுமக்கள் வரும் சத்தத்தைக் கேட்ட அந்த கும்பல் இருவரையும் விட்டுவிட்டு ஓடினர். பொதுமக்களின் உதவியுடன் காதலன்-காதலி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

 

karnataka forest incident... police investigation

 

இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி மும்பையை சேர்ந்தவர் என்பதும், படிப்பதற்காக கர்நாடக மாநிலம் மைசூருக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு  செய்த நிலையில், கூடுதல் டி.ஜி.பி பிரதாப் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்தில் வேற்று மாநிலத்தவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அதுதொடர்பாக விசாரிக்க ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கர்நாடகாவின் தனிப்படை விரைந்தது. அதேபோல் ஒரு தனிப்படை கேரளாவிற்கும் விரைந்தது.

 

karnataka forest incident... police investigation

 

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி பகுதியில் உள்ள சூசையபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த பூபதி என்ற நபரை முதலாவதாக போலீசார் கைது செய்தனர். தொலைபேசி எண் சிக்னல் அடிப்படையில் பூபதியை மைசூரு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனையடுத்து ஈரோடு, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 கூலித்தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் 17 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது. மேலும் ஒரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

விசாரணையில் இந்த கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் மைசூரு சென்று இளம்பெண்கள் மற்றும் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சத்தியமங்கலம் திரும்பும் வழியில் உள்ள சாமுண்டி மலை லலிதாதிரிபுரா பகுதியில் கூட்டாக மதுபானம் அருந்திவிட்டு சாலையில் வருபவர்களிடம் கூச்சலிடுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவை உலுக்கிய இந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.