ADVERTISEMENT

மீன் வளர்ச்சி கழக டீசல் பங்குக்கு பூட்டு! நாகை மீனவர்கள் தவிப்பு !

08:27 PM Jul 04, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நாகையில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டதால் 3 வது நாளாக 450 விசைப்படகுகள் டீசல் நிரப்ப முடியாமல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், ஒரே நாளில் 43 லட்சம் ரூபாய் மானியத்தொகை மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மீன் பிடி தடைகாலம் முடிந்து கடந்த 14 ம் தேதி நாகை மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கடல் நீரின் வெள்ளம்பார்த்து இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 340 விசைப்படகுகள் தடை காலம் முடியும் முன்னர் மீன்பிடிக்க சென்றதாக கூறி நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூரை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு, மீன்வளத்துறை அபராதம் விதித்து திடீர் என நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் 340 விசைப்படகுகளுக்கும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலையும் வழங்காமல் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் 340 விசைப்படகுகளுக்கு தேவையான மானிய டீசல் கிடைக்காததால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் நாகை மீனவர்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆவேசமடைந்த நாகை மீனவர்கள் இரு தினங்களுக்கு முன் கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையத்தை இழுத்து மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு வழங்கம் போல் டீசல் இறக்க வந்த டேங்கர் லாரிகள் எண்ணெய்யை இறக்க முடியாமல் திரும்பி சென்றதுடன் மற்ற விசைப்படகுகளுக்கு தேவையான டீசலை நிரப்ப முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதனிடையே டீசல் விற்பனை நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டதால் 2 வது நாளாக 450 விசைப்படகுகளுக்கு டீசல் நிரப்ப முடியாமல் மீனவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். மேலும் 340 விசைப்படகுகளுக்கு 30 ம் தேதி வழங்க வேண்டிய டீசல் வழங்காததால் ஒரே நாளில் 43 லட்சம் ரூபாய் மானியத்தொகை மீனவர்களுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது.

அரசுக்கும், மீனவர்களுக்கும் உள்ள உறவை மீன்வளத் துறை அதிகாரிகள் துண்டிக்க நினைப்பதாக குற்றம் சாட்டும் நாகை மீனவர்கள், மானிய டீசல் விவகாரத்தில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை வழங்குவதுடன், இப்பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக தீர்வு எட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT