ADVERTISEMENT

சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து... 7 பேர் உயிரிழப்பு!

02:30 PM Feb 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்திலுள்ள மாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் நான்கு அறைகள் இடிந்து தரைமட்டமானது.

மேலும் இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT