Skip to main content

மறைக்கப்படும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள்! -அச்சத்தை விலக்கி அபாயச் சங்கு ஊதுங்கள்!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா – மேலசிறுகுளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், தன் மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டார். அதுபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த கொத்தனாரும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

கூலித்தொழிலாளியின் மகளான சிறுமியை, கொத்தனார் பாலியல் தொந்தரவு செய்து, விவகாரம் மொத்த கிராமத்துக்கும் தெரிந்துவிட, இரு குடும்பங்களும் சொந்த கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டன.

 

ERE

 

கூலித்தொழிலாளியின் மனைவி தீப்பெட்டி ஆலையில் வேலை பார்ப்பவர். இவர், தன் மகளுக்குத் தொந்தரவு தந்த கொத்தனார் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால், வழக்கு, விசாரணை, கைது என நடந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று அஞ்சி, ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். அவர்கள், மெஜாரிட்டி சமூகம் என்ற அடிப்படையில், “இதையெல்லாம் ஏம்மா பெரிசுபடுத்துற?” என்று கொத்தனாருக்கு ஆதரவாக நடந்திருக்கின்றனர்.

ஊராரின் சமூக ஆதரவுப் போக்கால் நொந்துபோன அச்சிறுமியின் குடும்பம், ஊருக்குள் இருப்பதை அவமானமாகக் கருதி வெளியேறியது. பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரின் குடும்பத்தினரும், ஒரு குடும்பம் ஊரைவிட்டுச் சென்றதற்கு காரணமாகிவிட்டோமே? ஊர் கேவலமாகப் பார்க்குமே! என்று வெளியில் தலைகாட்ட பயந்து, ஊரைக் காலி செய்துவிட்டது.  
புகார் எதுவும் வராததால், தங்கள் லிமிட்டில் நடந்த இந்த விவகாரத்தை அறியாமலே, கடமையாற்றி வருகிறது அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையம்.

 

RTR

 

இதே விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இந்த கிராமம் மேலசிறுகுளம் போல் நடந்து கொள்ளவில்லை. அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து தொந்தரவு அளித்துவந்த, வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தைப் பாயச் செய்து கம்பி எண்ண வைத்துவிட்டது.
 

பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையால்தான், பாலியல் குற்றங்கள் பலவும் பெற்றோரால்  மறைக்கப்படுகின்றன. இதனால், வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் கொடியவர்கள் தப்பிவிடுகின்றனர். தொடர்ந்து இதே குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காட்டும் அச்சம், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அபாயத்துக்குள் சிக்க வைப்பதாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.