Skip to main content

மறைக்கப்படும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள்! -அச்சத்தை விலக்கி அபாயச் சங்கு ஊதுங்கள்!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா – மேலசிறுகுளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், தன் மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டார். அதுபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த கொத்தனாரும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

கூலித்தொழிலாளியின் மகளான சிறுமியை, கொத்தனார் பாலியல் தொந்தரவு செய்து, விவகாரம் மொத்த கிராமத்துக்கும் தெரிந்துவிட, இரு குடும்பங்களும் சொந்த கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டன.

 

ERE

 

கூலித்தொழிலாளியின் மனைவி தீப்பெட்டி ஆலையில் வேலை பார்ப்பவர். இவர், தன் மகளுக்குத் தொந்தரவு தந்த கொத்தனார் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால், வழக்கு, விசாரணை, கைது என நடந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று அஞ்சி, ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். அவர்கள், மெஜாரிட்டி சமூகம் என்ற அடிப்படையில், “இதையெல்லாம் ஏம்மா பெரிசுபடுத்துற?” என்று கொத்தனாருக்கு ஆதரவாக நடந்திருக்கின்றனர்.

ஊராரின் சமூக ஆதரவுப் போக்கால் நொந்துபோன அச்சிறுமியின் குடும்பம், ஊருக்குள் இருப்பதை அவமானமாகக் கருதி வெளியேறியது. பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரின் குடும்பத்தினரும், ஒரு குடும்பம் ஊரைவிட்டுச் சென்றதற்கு காரணமாகிவிட்டோமே? ஊர் கேவலமாகப் பார்க்குமே! என்று வெளியில் தலைகாட்ட பயந்து, ஊரைக் காலி செய்துவிட்டது.  
புகார் எதுவும் வராததால், தங்கள் லிமிட்டில் நடந்த இந்த விவகாரத்தை அறியாமலே, கடமையாற்றி வருகிறது அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையம்.

 

RTR

 

இதே விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இந்த கிராமம் மேலசிறுகுளம் போல் நடந்து கொள்ளவில்லை. அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து தொந்தரவு அளித்துவந்த, வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தைப் பாயச் செய்து கம்பி எண்ண வைத்துவிட்டது.
 

பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையால்தான், பாலியல் குற்றங்கள் பலவும் பெற்றோரால்  மறைக்கப்படுகின்றன. இதனால், வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் கொடியவர்கள் தப்பிவிடுகின்றனர். தொடர்ந்து இதே குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காட்டும் அச்சம், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அபாயத்துக்குள் சிக்க வைப்பதாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.