திருநெல்வேலியை சேர்ந்த ராக்கெட் ராஜா என்ற பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளான்.
ADVERTISEMENT
ராக்கெட்ராஜாவின் மீது திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கொலை மற்றும் கொலைமுயற்சி போன்ற பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் தீவிரமாக போலீசார் தேடிவந்தனர்.
ADVERTISEMENT
சமீபகாலமாக சென்னையில் ஒரு நட்சத்திர விடுதிக்கு ராக்கெட் ராஜா வருகிறான் என்ற செய்தி போலீசாருக்கு கிடைக்க தனிப்படை அமைத்து அவனை தொடர்ந்து தேடிவந்தனர்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தனது கூட்டாளிகளுடன் தங்கியிருந்த ரவுடி ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் போலீசார் கைதுசெய்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments