ADVERTISEMENT
முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை அதனை யாரும் பிடிக்க முடியாத காளையாக வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுத் தந்தது. இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி காளை உடல் நலக்குறைவால் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் திடீரென இறந்தது. குடும்பத்தில் ஒருவராக வளர்ந்த காளை இறந்ததைத் தொடர்ந்து குடும்பமே கண்ணீர் விட்டு அழுதனர்.
ADVERTISEMENT
இறந்த காளையை அடக்கம் செய்தனர். இந்நிலையில் இன்று ஸ்டார் வீரா ராணி இறந்ததை சுரேஷ் குடும்பத்தார் மற்றும் அவரது நண்பர்கள், காளைக்கு சில அடி உயரம் போட்டோ பிரேம் செய்து மாலை அணிவித்து பல வகை உணவுகள் படைத்து துக்கம் அனுசரித்தனர். காளைக்கு காரியம் செய்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
Show comments