Skip to main content

"என்னத்த ஜெயிச்சு, என்னத்த பண்ண" என புலம்பும் திமுக!விசாரிக்கும் ஸ்டாலின்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் என்றாலும், ஒரு இடைத் தேர்தலுக்குரிய அத்தனை வித்தை களுடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்திருக்கிறது வேலூர் எம்.பி. தொகுதியின் தேர்தல். மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என இரண்டு ஆளும் கட்சிகளின் அதிகார பலத்தையும் மீறி, பெரும்பாடுபட்டு 8,146 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்த்.

 

admk



மே மாதம் நடந்த எம்.பி. தேர்தலில் 22 தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றியை அறுவடை செய்திருந்தது தி.மு.க. அதே போல் இப்போது வேலூர் தொகுதியிலும் வெற்றி பெறலாம் என நினைத்திருந்தது. அது நடக் காததால், "என்னத்த ஜெயிச்சு, என்னத்த பண்ண' என கதிர் ஆனந்தின் அப்பாவும் தி.மு.க.வின் பொரு ளாளருமான துரைமுருகனை புலம்ப வைத்துவிட்டது. வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரிட மும் இதுபற்றிக் கேட்டோம். தி.மு.க. ஆதரவு ஓட்டு கள்“முழுசா விழலைன்னுதான் சொல்லணும். அதுக்குக் காரணம் துரைருகன்தான். கலைஞர் இருந்த போதும் சரி, இப்போது தளபதி தலைவராக இருக் கும்போதும் சரி, நிர்வாகிகளும் தொண்டர்களும் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை மொத்தமும் தனக்குத் தான்னு நினைச்சு நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மதிக்கவே மாட்டாரு துரைமுருகன்.

 

acs



பாக்கெட்ல இருந்து பத்து பைசாவை எடுத்து கட்சிக்காரங்களுக்குச் செலவு பண்ண ணும்னா துரைமுருகனுக்கு வேப்பங்காயா கசக்கும். எல்லா மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள் வந்து வேலூரில் தங்கி, சொந்தக் காசை செலவழித்து வேலை பார்த்தார்கள். அவர்கள் எங்கே தங்கியிருக்காங்க, சாப்பாடு வசதியெல்லாம் எப்படின்னு என்னைக்காவது கேட்டிருப்பாரா? இந்த மாவட்ட நிர்வாகிகளின் நிலைமை அதைவிட மோசம். சீட்டு கேட்பவர்களிடம் அறிவாலயத்தில் நேர்காணல் நடக்கும் போது, "சீட்டு கேக்குறியே எவ்வளவு செலவு செய்வே'ன்னு இவர்தான் கேட்பார். பணம் இல்லைன்னு சொன்னா... "அப்புறம் எதுக்குய்யா சீட்டு கேட்குறே'ன்னு நக்கலடிப்பார். இப்ப அவரு மகனை நிப்பாட்டிட்டு காசு கொடுக்கமாட்டேன்னா என்ன அர்த்தம்'' என ரொம்பவே கொந்தளித்தார்கள்.

 

dmk



இன்னும் சில நிர்வாகிகளோ வேறொரு கோணத்தில் பேசினார்கள்.  சென்னை இராயப் பேட்டையில் நடந்த தலைவர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது "மன்னன் ராஜராஜ சோழன் அரண்மனையையும் கட்டினான், பெருவுடையார் கோவி லையும் கட்டினான். காலப்போக்கில் அரண்மனை அழிந்துவிட்டது, பெருவுடையார் கோவில் இன்றும் நிலைத்திருக்கிறது. காரணம் அரண்மனை என்பது தனிச் சொத்து, கோவில் என்பது மக்கள் சொத்து. எனவே தளபதி அவர்களே தி.மு.க. என்பது மக்கள் இயக்கம், இதை தொண்டர்கள் கட்டிக் காப்பாற்றுவார்கள்' என்றார். அதைப்போல்தான் தொண்டர்கள் எப் போதும் கட்சியின் மீது மாறாத பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள். ஆனால் துரைமுருகன் போன்ற ராஜ நினைப்புக்காரர்களுக்கு இப்படித் தான் பதில் சொல்வார்கள். பொன்முடியும் இதே நினைப்பில்தான் இருப்பார். ஆனால் மகனுக்கு எம்.பி.சீட் கிடைத்ததும் நிர்வாகிகளின் தோளில் கைபோட்டார், கைக்காசை தாராளமாக வாரி இறைத்தார்'' என்கிறார்கள்.


துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் தரப்பில் நாம் விசாரித்த போது, ""சொந்த மாவட்ட நிர்வாகிகளே சாதிப் பாசத்தில் ஏ.சி.எஸ்.சுக்கு வேலை பார்த்தார்கள். "இஸ்லாமிய வாக்குகளும் தலித் வாக்குகளும் கை கொடுக்கலேன்னா நிலைமை மோசமாகியிருக்கும்' என புலம்பிக் கொண்டிருக்கிறார் துரைமுருகன்'' என்கிறார்கள். அதே நேரத்தில் ஏ.சி. எஸ். தரப்பிலோ விரக்தி அதிகமாகவே தெரிகிறது. மே மாதம் தேர்தல் ரத்தான போது 130, இப்போது சுமார் 70 என "சி'க்களில் செலவழித்தும் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு துரோகத்தால் குறைந்த ஓட்டில் தோற்றுவிட்டோமே என ரொம்பவே வேதனைப்படுகிறாராம் ஏ.சி.எஸ். ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் லீடிங் என்றதும் உற்சாகமானார் ஏ.சி.எஸ். ஆனால் நிலைமை மாறியதும் ராணிப்பேட்டையில், தான் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து கிளம்பி சென்னைக்குப் போய்விட்டாராம்.

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரோ, ஏ.சி.எஸ். தாராளமா செலவு பண்ணத்தான் செஞ்சாரு. ஆனால் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துக் கிட்டு, மற்றவர்களை நெருங்கவிடல'' என்கிறார்கள். ஏ.சி.எஸ்.சுக்கு தேர்தல் பணியாற்றிய ரஜினி மக்கள் மன்றத்தினரும் அப்செட்டில் உள்ளனர். 18-ஆம் தேதி வாணியம்பாடியில் நடக்கவுள்ள நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்தக் கூட்டத்திற்கு முன்பாக வேலூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரணை இருக்கும் என்கிறார்கள். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.