ADVERTISEMENT

திருநாவுக்கரசர் ஆர்பாட்டத்தில் பாதியில் வெளியேறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

04:38 PM Sep 17, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ரஃபேல் விமான ஊழலை கண்டித்து ஆர்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். திருச்சி மாவட்டத்தில் புதிதாக திருநாவுக்கரசரால் நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்திருந்தாலும். பழைய பொறுப்பாளர்கள் இளங்கோவனின் ஆதரவாளர் பிரமாண்டமாக பேனர் பிளக்ஸ் மூலம் இளங்கோவனுக்கு பெரிய வரவேற்பு கொடுத்தனர். ஆர்பாட்டத்திற்கு முந்தையநாள் இரவே திருச்சிக்கு வந்தார் இளங்கோவன். திட்டமிட்டபடி திருநாவுக்கரசர் தலைமையில் கலந்து கொண்டனர். முதலில் ஆரம்பத்திலே மைக் பிடித்த பேசிய இளங்கோவன் 10 நிமிடம் பேசிவிட்டு அப்படியே இறங்கி சென்றார். அவருடன் வந்திருந்த அத்தனை ஆதரவாளர்களும் பாதியிலே விட்டுவிட்டு அப்படியே கலைந்து சென்றது அப்பட்டமாக தெரிந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT