ADVERTISEMENT

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

07:56 AM Jul 17, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பெசன்ட் நகர் உள்ளிட்ட அமைச்சருக்குச் சொந்தமான 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்னும் அதிக இடங்களில் சோதனை நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT