ADVERTISEMENT
ADVERTISEMENT
திருச்சி மாவட்டம், லால்குடி புதிய வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(75). இவர் கடந்த 17ஆம் தேதி லால்குடியில் உள்ள சப்தரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் விநாயகர் தாங்கி வந்த தேரின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி இரண்டு கால்கள் மீதும் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட வந்தது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லால்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாணையில் ஈடுபட்டுள்ளனர்.
Show comments