ADVERTISEMENT

கரடி தாக்கி முதியவர் படுகாயம்... திருப்பத்தூரில் பரபரப்பு!

04:37 PM Jul 04, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் மலை அடிவாரத்தில் முதியவர் ஒருவரை கரடி தாக்கிய நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டையை சேர்ந்த சின்னபொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. 65 வயது முதியவரான இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் மலை அடிவாரத்தில் ஆடு மேய்க்க சென்றிருந்த நிலையில் அங்கு வந்த கரடி ஒன்று முதியவர் திருப்பதியை தாக்கியுள்ளது. காயமடைந்த நிலையில் கிடந்த முதியவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பிவைத்தனர். ஆனால் காயம் அதிகமாக இருந்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆடு மேய்க்கச் சென்ற முதியவரை கரடி தாக்கிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT