ADVERTISEMENT

வதந்தியை நம்ப வேண்டாம் - நடிகர் சரத்பாபு குடும்பத்தினர் வேண்டுகோள்

10:33 PM May 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான தகவல் போலியானது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு சரத்பாபு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘முள்ளும் மலரும்’, 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. முள்ளும் மலரும் படத்தில் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' என்ற இவர் நடித்த பாடல் மிகவும் பிரபலமானது. இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடந்த சில தினங்கள் முன்பு சரத்பாபு (71) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு உயிரிழந்ததாகத் தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த தகவல் ஒரு வதந்தி. யாரும் நம்ப வேண்டாம். ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர். உடல்நிலை தேறி வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT