ADVERTISEMENT

இவர்களுக்கா ஆட்சி, அதிகாரத்தை தரப்போகுறீர்கள்?- கன்னியாகுமரியில் சீமான் பேச்சு

07:15 PM Apr 07, 2019 | kalaimohan

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஜெயன்றீன் அவர்களை ஆதரித்து நேற்று மாலை நாகர்கோயில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏழையாகி விட்டார்கள் மக்கள் 22 ஆண்டுகால விடுதலை பெற்ற இந்தியாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டு இருக்கிறது. ஆகினும் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால் பொறுப்பேற்க வேண்டிய கட்சி காங்கிரஸ், பொறுப்பேற்க வேண்டிய கட்சி பாரதிய ஜனதா. ஆனால் இப்பொழுது வெட்கமில்லாமல் 6000 போடுகிறேன் என்றால் இதே மோடி அவர்களிடம் கேட்போம் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் தருகிறேன் என்று சொல்லி உள்ளீர்களே விவசாயிகள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று டெல்லியில் நிர்வாணமாக போராடினார்களே அப்போது ஏறெடுத்து பார்க்கவில்லை. இப்போது இவ்வளவு அக்கறை இருப்பவர் ஏன் அப்போது பார்க்கவில்லை. இந்த ஆறாயிரம் ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்கத் திட்டம் தீட்டுகிற மோடி அவர்களே மக்கள் மீது அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருக்கிற மோடி அவர்களே ஐந்தாண்டு கால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்தை கொண்டு வந்து போட்டு முடித்திருக்கலாமே.

இந்த மாதம் தேர்தல் போன மாதம் அறிவிப்பு தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 2000 கொடுங்கள் எனக் கூறுகிறது அரசு. இது ஓட்டுக்கு கொடுத்த காசு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய கொண்டுவந்த திட்டம் அல்ல அறிவார்ந்தவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

வருடம் 72,000 ஆயிரம் கொடுப்போம் என்கிறார் ராகுல் காந்தி. 57 லட்சம் கோடி நாட்டின் கடன். அடித்தட்டு மக்களின் வரி சுரண்டப்படுகிறது. கல்வியை அனைவருக்கும் சமமாக கொடுக்க இந்த அரசிற்கு வழியில்லை எல்லாவற்றையும் தனியார் முதலைகளுக்கு விற்றாகிவிட்டது.

சோனியா காந்தி அவர்களுக்கு புற்றுநோய் என்றால் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவம் பார்த்துக்கொண்டார். இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சி செய்த இந்த கட்சி இந்திய குடிமக்களுக்கு மருத்துவைத்தை ஏன் சரிசமமாக தரவில்லை.

இவர்களுக்கா ஆட்சி அதிகாரத்தை தரப் போகிறீர்கள். கச்சத்தீவை மீட்க முடியவில்லை. கொடுத்தது யார் இந்திராகாந்தி அம்மையார் கொடுத்தபோது வேடிக்கை பார்த்து நின்றது திமுக. ஆனால் இன்று ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கச்சத்தீவை மீட்க போராடுவோம் என முதல் முதல் கொடுத்த தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்துள்ளது இந்த இரு கட்சிகளும்.

18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவை அங்கம் கொண்ட ஒரே கட்சி திமுக. 18 ஆண்டுகள் பதவியில் இருந்து செய்ய முடியாத ஒன்றை இப்போது செய்யப் போகிறேன் என்பதை என் மக்கள் எப்படி நம்புகிறார்கள்.

காமராஜர் சென்னை மெரினா கடற்கரையில் மாநாடு பேசிக்கொண்டிருந்தார் அப்போது மக்களை நோக்கில் பேசுகையில் ''ஏன் நாம ஊரான் நாட்டில் சோற்றுக்கு கையேந்தனும் அதற்காகவா போராடி சுதந்திரம் பெற்றோம் நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை சாப்பிட்டு நிம்மதியா படுப்போம்'' என்றார் அதுதான் தற்சார்பு பொருளாதாரம். பிச்சை எடுத்து பிரியாணி சாப்பிடுவதில்லை ராஜா வளர்ச்சி சொந்த வீட்டில் கஞ்சியைக் குடித்துவிட்டு தன்மானத்தோடு வாழ்வதுதான் வளர்ச்சி இதுதான் காந்தி சொன்ன தற்சார்பு பொருளாதாரம் அன்னை இந்திரா காந்தி சொன்ன தற்சார்பு பொருளாதாரம்.

பாஜக இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஒரே திட்டம் தான் துறைமுகம் கொண்டு வருவது. நாங்கள் கேட்பது மீன்பிடித் துறைமுகம் நீங்கள் கொண்டுவருவது சரக்கு பெட்டக ஏற்றுமதி செய்கின்ற துறைமுகம். இந்தத் துறைமுகத்தில் என்ன வேலை நடக்கும் நாங்கள் கேட்டால் ஏற்றுமதி இறக்குமதி செய்கிறோம் என்கிறார்கள். ஒரே கேள்வியைத்தான் நாங்கள் எழுப்புகிறோம் ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது சரி, எதை ஏற்றுமதி செய்வீர்கள் இறக்குமதி செய்வீர்கள். இதற்கு சரியான பதில் சொல்ல வேண்டும்.

இந்த நிலத்தின் வளங்களை ஏற்றுமதி செய்வீர்கள் வெங்காயம் பருப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்வீர்கள் வேற என்ன செய்வீர்கள். காரை ஏற்றுமதி செய்வார்கள் சோறை இறக்குமதி செய்வார்கள். ஆண்டு ஒன்றிற்கு 50 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. மூன்று டன் எடை வரை உள்ள கார்கள் தயாரிக்கப்படுகிறது. 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் என்பது பத்தாயிரம் மக்கள் குடிநீர் தேவைக்கான தண்ணீர் அள்ளிக்கொண்டுபோய் அந்நிய முதலாளிகள் வியாபரம் செய்கிறான் இந்தநிலை மாற விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT