Skip to main content

ஏன் இந்தி படிக்க வேண்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள்? - சீமான் கேள்வி

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி  இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் - எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

 

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் கட்டாயமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கண்டனங்களை பெற்றுவருகிறது.

 

இதுகுறித்து தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழர் உரிமை, மொழி, கலாச்சாரம், கல்வி போன்றவைகளுக்காக குரல் கொடுத்துவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,

 

seeman

 

50 ஆயிரம் ஆண்டுகளை தாண்டியது தமிழ் அதைவிடுத்து 500 ஆண்டுகள் கூட தாண்டாத இந்தியை படிப்பதை உயர்ந்தது  என்று எப்படி சொல்லுகிறீர்கள். விஞ்ஞானி மயில்சாமி  அண்ணாதுரை சொல்கிறார் என் கல்வி என்னை கரைசேர்க்கவில்லை ஆனால் என் தாய் மொழி தமிழ் என்னை நிலவுவரை கொண்டு சேர்த்திருக்கிறது. அதற்கு காரணம் அரசு பள்ளியில் தாய் மொழி கல்வியில் படித்ததுதான். தமிழ் எனக்கு தடைக்கல்லாக ஒருபோதும் இருந்ததில்லை படிக் கல்லாகத்தான்  இருந்தது. தமிழால் முடியும் எதுவும் தமிழர்களால் முடியும் என கூறியுள்ளார். இதற்கு என்ன பதில் சொல்வீர்கள். 

 

இங்குமட்டுல்ல உலகில் எங்கும் தாய் மொழியில் கல்வி கற்றவன் மட்டும்தான்  படைக்கிறான். ஆனால் இந்தியா மட்டும்தான் பயன்படுத்துது. எனவேதான் எல்லா நாடும் மேட் இன் ஆக இருக்கிறது இந்தியா மட்டும் மேக் இன் ஆக இருக்கிறது. எனவே இந்தி படிப்பதை தகுதியாக சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நம்ம பாடத்திட்டத்தில் சில குறைகள் இருக்கிறது அதை சரி பண்ண வேண்டும் மேம்படுத்த வேண்டும் அப்படி தான் பேச வேண்டுமே  தவிர இந்தி படித்தால்தான் கல்வியின் தரம் என்பது எப்படி ஏற்பது. நாங்கள் எப்படி கல்வி தரத்தை மேம்படுத்துவோம் என்பதை வரைவு புத்தகமாக கொடுத்திருக்கிறோம். அதைப் படியுங்கள். புத்தகம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் அரசு டாட் காம் என்ற இணைய தளத்தில் இருக்கிறது படியுங்கள்.

 

நம் தாய் மொழியான தமிழை , நம் கல்வியை எப்படி உயர்த்த வேண்டும் என எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களிடம் அந்த கனவு இருக்கிறதா என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என் மொழியும், என் வரலாறையும் படிக்க வைக்குமா இந்தி? அது வல்லபாய் படேலை பற்றி படிக்க வைக்கும் வஉசியை பற்றி படிக்க வைக்குமா? ஜான்சி ராணியை பற்றி படிக்கவைக்கும் வேலுநாச்சியாரை படிக்க வைக்குமா? 

 

வருபவர்கள் எல்லாம் தமிழை சவப்பெட்டியில் போட்டு கடைசி ஆணி அடிக்க நினைத்தால் எப்படி தமிழ் உயிர்பெறும். எனவே இதையெல்லாம் ஏற்கமுடியாது. இந்தியை எங்கள் பிள்ளைகள் விரும்பி படிக்கிறார்களா அதில் ஒன்றுமே பேசமுடியாது. ஆனால் கட்டாயமாக படித்துதான் ஆகவேண்டும் என்பதை ஏற்கமுடியாது.

 

 

சரி இந்தியை படிக்கிறோம் ஏன் படிக்கனும் என்று சொல்லுங்கள். ஒரு காரணம் சொல்லுங்கள். இந்தி படித்தால்தான் வேலை என்றால் ஏன் தினம் 3000, 4000 பேர் வடமாநிலத்திலிருந்து இங்கே பிழைப்பு தேடி வருகிறார்கள். அவரவர்கள் மொழி அவரவருக்கு உயர்ந்தது என்றால் என் மொழி எனக்கு உயர்ந்தது. தமிழகத்தில் இந்தியை கட்டாயமாக்கினால் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆனாலும் களத்தில் நின்று போராடுவோம் என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“வரி வாங்கி ரோடு போட்டு, திரும்ப டோல் போட்டு வசூல் பண்றாங்க” - நா.த.க வேட்பாளர்!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Naam Tamilar candidate Ezhilarasi campaign in Sivagangai

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சட்டெரிக்கும் வெயிலில் திறந்த வாகனத்தில் நின்று கீரமங்கலத்தில் வாக்கு கேட்டு பேசும் போது, “நாட்டின் கனிமவளங்கள் எல்லாம் கொள்ளை போய்விட்டது. ஆற்றில் தண்ணீர் ஓடி ஊற்றில் தண்ணீர் குடித்த காலம் மாறிப் போய் பாட்டிலில் தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். மழை பெய்தால் தான் தண்ணீர் வரும் போல என்று இன்றைய நம் பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலத்தடி நீரை, ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சும் தைலமரக்காடுகளை அரசாங்கமே வளர்க்கிறது. ஒட்டு மொத்த கனிம வளங்களும் காணாமல் போகிறது. எதிர்கால நம் பிள்ளைகளுக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்.

வரி வசூலிக்கும் அரசாங்கம் மக்களுக்கு கல்வி, மருத்துவம், கொடுக்க வேண்டும் ஆனால் நம்மிடம் வரியும் வாங்கிக் கொண்டு, கல்வி மருத்துவத்தையும் நம்மிடமே விற்க அனுமதிக்கிறது. நம்மிடம் வரி வசூல் செய்து சாலை போட்டு விட்டு பிறகு டோல் போட்டு அதற்கும் வரி வசூல் நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.