Skip to main content

கரும்பு விவசாயி சின்னம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது...- சீமான்

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வாக்கு இயந்திரத்தில் விவசாயி சின்னம் மட்டும் மற்ற சின்னங்களை விட தெளிவற்ற நிலையில் சிறியதாக பதிவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இறுதி கட்டத்தில் எதுவும் செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றமும் சொல்லிருச்சு.

 

 

seeman

 

கடைசியாக இருப்பது மக்கள் மன்றம்தான் எனவே உங்கள் மூலமாக என் மக்கள்கிட்ட சின்னம் மறைக்கப்பட்டிருக்கிறது ரொம்ப சின்னதாகவும், மங்கலாகவும் உள்ளது என மக்களிடம் எடுத்தும் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

 

மத்திய, மாநில அரசின் அழுத்தத்தால் இது நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

 

வாய்ப்பிருக்கிறது, தென் மாநிலத்தில் போட்டியிடும் எனக்கும், பவன் கல்யாணுக்கும்  மட்டும்தான் இது. தென்மாநிலத்தில் புதிய ஆற்றலாக வளர்ந்து வருகிறோம் எனும்போது அப்படித்தான் யோசிக்க தோணுகிறது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சின்னங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம் மட்டும்  மறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் வளர்த்திட கூடாது அதிக வாக்குகளை பெற்றிடக்கூடாது புதிய ஆற்றல் வந்திற கூடாது என்கிற நோக்கம் தான். 

 

நாங்கள் எடுத்து வைக்கிற, நான் ஒரு தேசிய இனத்தின் மகன், என் இனம் என்கிறேன், என் மலை, என் காடு, என் வளம் என்கிறேன். நாங்கள் வரும்போது உங்கள் இஷ்டத்துக்கெல்லாம் ஓஎன்ஜிசி குழாயை போட்டு மீத்தேன், ஈத்தேன் எடுக்க முடியாது. அப்போ எரிபொருளுக்கு என்ன செய்வேன் என்றெல்லாம் கேட்க கூடாது. சிங்கப்பூர் சின்ன நாடு அதுவும் ஈத்தேன் மீத்தேன் எடுக்கிறது மக்கிய மரக்கழிவு மற்றும் குப்பையிலிருந்து எடுக்கிறது. அவ்வளவு சின்ன நாடு அதை செய்யும்போது இவ்வளவு பெரிய நாடு மண்ணின் வளத்தை அழித்ததுதான் அதை எடுக்கணும்னா என்ன?

 

 

அணுவுலையாலதான் மின்சாரம் தயாரிக்க முடியுமா ஏன் காற்றாலை இல்லையா? மாற்று மின் பெருக்கத்துக்கு வழி இல்லையா? அதையெல்லாம் செய்யாமல் இந்த நாசகார திட்டங்களை இந்த அரசு என் மண்ணில் செய்ய நினைக்கிறது. இவ்வளவு மலைகள் இருக்கிறது ஆனால் நியூட்ரினோ திட்டத்தை  மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் செய்ய என்ன தேவை வருகிறது. இதிலிருந்தே தெரியவில்லையா தகப்பன் இல்லாத வீடு போல தலைவன் இல்லாத நாடாக தறிகெட்டு நிற்கிறது. வருபவர் போகிறவர் எல்லாம்  நாசகார திட்டங்களை கொண்டுவர நினைக்கிறார்கள். இந்த மண்ணின் பிள்ளைகளாக எங்கள் மண்ணின் வளத்தை பாதுக்காக்க சண்டை போடுவோம் அதனால் எங்களை போன்ற அரசியல் கட்சிகள் வளர்ந்திட கூடாது என நினைக்கிறார்கள்.

 

 

தரகர்களை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தல் அமைப்புதான் இங்கே இருக்கிறதே தவிர எளிய மக்களில் இருந்து தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பு இல்லையே. எல்லாருமே முதலாளிகள். முதலாளிகள் தான் கோடி கொடுத்து சீட் பெறுகிறார்கள், காசு கொடுத்து ஓட்டு பெறுகிறார்கள் முதலாளிகளுக்கான அதிகாரம்தான் திரும்ப திரும்ப கட்டமைக்கப்படுகிறது. 

 

மக்களுக்கான ஆட்சியோ, அதிகாரமோ இங்கு நிறுவப்படவில்லையே. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டு நாங்கள் வளர்கிறோம் என்று அனுபவிக்கிற எங்களுக்குத்தான் தெரியும்.  கொடி ஏற்ற விடமாட்டார்கள், நாங்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் நாங்கள் கேட்ட இடத்தை விட்டு மக்கள் வரவே முடியாத சந்தில் இடம் தருவார்கள். இப்பொழுது அதிகாரத்தில் உள்ளவர்கள் வெற்றியை பெறவில்லை வெற்றியை வாங்குகிறார்கள்.

 

 

ஒரு இளம்தலைமுறை எப்படி நம்பிக்கையோடு எழுந்துவரும். ஒரு ஜனநாயகத்தின் மேல எவ்வளவு வெறுப்பு வரும். எதுவுமே சரியில்லை என்ற உணர்வு வராதா, அந்த சிந்தனை வராமல் இருக்க மயக்குவதற்கு சாதிய போதையை தூண்டுவது, மத போதையை தூண்டுவது, சாராயத்தை ஊற்றி கொடுப்பது, திரைக்கவர்ச்சியை வைத்து மயக்கிபோடுவது சிந்திக்கவே விடாமல் செய்வதுதான் இந்த அதிகாரமும், ஆட்சியாளர்களும் செய்யும் வேலை.

 

 

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கோரவில்லை அதேபோல் மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழி சாலை முறைப்படி கொண்டுவரப்படும், என கூறியுள்ளனர் அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

 

எட்டுவழி சாலைபோடுவதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. இது சாகர்மாலா திட்டத்தினுடைய கிளை திட்டம். பீம்ஸ் ஸ்டெக் என்ற அமைப்பு செயல்படுத்துகிறது. நமது நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கத்தான் சாலை போக்குவரத்து, தொடர்வண்டி போக்குவரத்து, வானூர்தி போக்குவரத்து எல்லாத்தையும் கடல் போக்குவரத்தில் இணைக்க இந்த முயற்சி. எட்டுவழி சாலை போடுவேன் என்பது அவர்களின் முடிவு. ஆனால் அது நடக்கவே நடக்காது என்பது மக்களின் முடிவு என்று கூறினார்.

 

 

நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு  இயந்திரத்தில் தெளிவாக இல்லை, எனவே வாக்குபதிவு இயந்திரத்தில் தெளிவாக சின்னத்தைப்  பதியக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்திருந்தது குறிப்படத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்