ADVERTISEMENT

திமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும்- தமிழிசை கருத்து

04:22 PM Aug 18, 2019 | kalaimohan

திமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தபடுவார்கள். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? என கேள்வி எழுப்பி அவர், பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியல் ஆக்குகிறார்.

காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின் மெரினாவில் ஏன் காமராஜருக்கு நினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததும் திமுகதான், அப்துல்கலாம் ஜனாதிபதியாகும் போதும் எதிர்த்தும் இதே திமுகதான். திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவர்களாக வர முடியாது எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT